Sunday, May 31, 2015

ICICI launches EMI on Debit Cards!

ICICI
ICICI Bank, the country’s largest private sector lender, has introduced an equated monthly instalment (EMI) option for its customers on debit card purchases.

The EMI option, which was so far limited to credit card holders, will now allow even debit card holders to convert their high-value transactions into equated monthly instalments.
Only debit card holders who have fixed deposits of minimum Rs 10,000 linked to the savings bank account will be allowed to exercise this option of buying products on an EMI of three, six, nine or 12 months. The customer is not allowed to break the fixed deposit till the end of the EMI term.

“As we approach the festive season, we believe this initiative will empower over 22 million ICICI Bank debit card customers to buy products of their choice and pay in easy EMIs,” said Rajiv Sabharwal, Executive Director, ICICI Bank.

To begin with the bank has only tied up with Samsung for phones and consumer durable products. Going ahead, the lender plans to add more brands under the EMI option.

“The tie-up will offer financial flexibility, drive engagement and create easy product accessibility for our consumers. With the festival season around the corner, we are confident that such exciting schemes will add to consumer celebrations,” said Asim Warsi, Vice President, Mobile & IT, Samsung India.

ICICI Bank said in a statement that it is the first bank in the country to introduce this facility.


Features:

  • No processing fee.
  • Tenure option of 3, 6 ,9,12,18 and 24 months.
  • Low interest rate of 13%(on reducing basis) for 3, 6, 9 and 12 month tenures.15%(on reducing basis) for 18 and 24 month tenures.
  • Currently facility available for all ICICI Bank Savings and select Current account category customers having a linked fixed deposit or recurring deposit other than tax saver fixed deposits and PPF.
  • EMI facility is applicable on all transactions above Rs.10,000 at participating stores.
  • EMI conversion without the hassles of any paperwork.
  • Tie up with Apple in 2000 stores pan India (Smart phones only).
  • Tie up with Samsung in 9000 stores pan India (Smart phones, Tablets, Televisions, Refrigerators, Air – Conditioners, Microwave etc).
  • To know your nearest store offering EMI facility, SMS EMI <PIN CODE> to 56886 or click here.
  • Tie up with other partners namely Haier, Hero Motors, Firefox, Kurlon, Lenovo, Nikon, Sharp, Sleepwell, Suzuki Motors, TVS motors, Vespa Motors and VLCC.
  • Leverage your existing fixed deposits to convert big ticket purchases to easily manageable installments.
  • Coming soon: EMI at popular e-tailing websites, EMI on Call, EMI facility at other partners across categories.

How to avail of EMI facility:

  • Customer does a transaction at participating partner stores and selects the tenure of EMI.
  • Customer pays by ICICI Bank Debit Card and inputs the ATM PIN at specified terminals in the store.
  • Transaction is authorized and conversion to EMI happens post successful validation of parameters.
  • EMI conversion and reversal of amount in the account happens within 2 business working days after the transaction date.
  • First installment will be deducted 30 days from reversal of the money in the account.
  • Account statement will display the transaction with appropriate narration.
 
For Terms and Conditions --> Click Here...


Tuesday, April 28, 2015

தலயின் வரலாறு | History of THALA'Ajith!

தல- யின் ரசிகர்களான
உங்களுக்கும்! என் தல -யினை பற்றி தெரியாத மற்றவர்களுக்கும்!!

" தல அஜித் பற்றிய விவரங்கள்
54 -படங்கள் அதில் 35 -வெற்றி
19 -தோல்வி

3 -கார் ரேஸ் வின்னர்

12 -பைக் ரேஸ் வின்னர்

இவர் படித்து 10-வது, ஆனால் 5 மொழிகள் பேசுவார்.

CBSE பாடத்தில் இவரைபற்றி பாடம்
உள்ளது.

இவர் முதலில் ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டார்.

உலகிலேயே! விமான உரிமம் உள்ள ஒரே நடிகர்.

உலகிலேயே! திறமையாக கார் ஓட்டும் நடிகர்களில் அஜித் 14வது இடம் பிடித்திருக்கிறார்.
(இந்தியாவில் முதல் இடம்
வகிக்கிறார்.)

சினிமாவில் யாருடைய உதவி இன்றி வந்த முதல் நடிகர்.
பல கோடி ரசிகரகளை கவர்ந்த முதல் மனிதன்.

தமிழ் சினிமாவில் நுழைந்து தனது பெயரை மாற்றிக்கொள்ளாத நடிகர்.

5 -முறை Flim Far விருது.

கலைமாமணி விருது.

எம் ஜிஆர் விருது.

2 முறை சினிமா எக்ஸ்பிரஸ்
விருது.

கேரளா பாரத்முனி விருது.

1-தேசிய விருது.

4 -விஜய் டிவி விருது.

♥சினிமாவில் காதல் திருமணம்
செய்து கொண்ட ஜோடி பல
இருந்தாலும் அஜித் ஷாலினி இவர்கள் தான் அனைவருக்கும் நினைவில் வருவார்கள்.

✔இவர் நடித்த 25 மற்றும் 50வது படங்கள் வெற்றி படங்களாகும்.

பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் தமிழ்நாட்டின்
முதல்வரை எதிர்த்து பேசியது
அனைவரின் மத்தியில்
ரஜினி அவர்கள் கை தட்டியது.

✔அரசியலை வேண்டாம்
என்று வாய் விட்டு சொல்லியவர்.

நடிகர் ரஜினி அவர்கள்
அஜித்திற்கு ஒரு புத்தகம்
கொடுத்திருக்கிறார்.

மேலும் அவர் கூறியது
நான் நினைப்பதெல்லாம்
அஜித் உச்ச நிலைக்கு செல்ல
வேண்டும் என்றுதான்.

சினிமா உலகிலே இவருக்கு அதிக
ரசிகர்கள் உள்ளனர்.
(எ.கா சிம்பு,பரத்,ஜெய்).

✔ரஜினிக்கு அடுத்து 100
கோடி வசூல் செய்த நடிகர்(மங்காத்தா).

பெண்கள்!
முதலில் பேனர் அடித்தது
அஜித்திற்கு மட்டும் தான்!..
(காதல் கோட்டை) இடம் மதுரை.

இவரை ரசிகர்கள் தல,ஆசைநாயகன்,அல்டிமெட் ஸ்டார் என்று அழைக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தல என்றாலே அனைவருக்கும் தெரியும்..

அஜித் 7 இருவேட படங்கள்
சிவாஜிக்கு அடுத்து 10வேடமிட்டு
நடித்த முதல் நடிகர் அஜித்
(சிட்டிசன்).

✔சோ ! அடுத்த எம்ஜிஆர் என்று
அஜித்தை கூறினார்.

✔போட்டோ கிராபர் பப்ளிசிட்டி இல்லாமல் உதவி செய்பவர்.

❤லண்டன் போர்ப்ஸ் வெளியிட்ட
உலகின் முதல் 100 ஜென்டில்மேன்களில் அஜித்
62வது இடம் பிடித்தார்.

இளம் நடிகர்களை மதித்து நடிக்கும்
நடிகர்களில் அஜித் 3வது இடமாகும்.

வயதை மறைக்காமல் நடித்த
முதல் நடிகராவர்.

✔மெக்கானிக்கர் பார்முலா 1,2,3
ஆகியவற்றில் கலந்துகொண்ட
உலகிலே முதல் நடிகர் அஜித்.

✔2008 வரை தமிழ்நடிகர்களில
் அதிக ரசிகர் மன்றம் கொண்டவர் அஜித்(75.000) மன்றங்கள்.

தமிழ்,ஹிந்தி,தெலுங்கு என 3
மொழிகளிலும்நடித்திருக்கிறார்.

✔விளம்பர படங்களில் நடித்து தன்
ரசிகர்களை ஏமாற்றும் நடிகர்களில்
மத்தியில் தன் ரசிகர்களை ஏமாற்றாத நடிகர் நல்ல மனிதன் தல அஜித்.

ரஜினி!
--------
பிராங்கா பேசுவார்,எவ்ளோ பெரிய
ஆளா இருந்தாலும்,
பெரிய
நிகழ்ச்சியா இருந்தாலும்,
அது என்ன இடம்னு பாக்க
மாட்டாரு,
ஒப்பண்ணா பேசிடுவார்.

கமலஹாசன்
----------------
ஓபன் ஸ்பீச் -- எனக்கு அப்புறம்
கமல்
இருக்க
மாட்டாரா அப்டின்னு சொல்ல
முடியாது,
அந்தஅளவுக்கு வேகமாக
வந்து தனி ஆளா வந்தவர் தான்
தம்பி அஜித்..

சரத் குமார்
-------------
அஜித் என்னோட கூட புறக்காத
தம்பி மாதிரி, என்னைக்கும்
என்னோட
சப்போர்ட் அவருக்கு உண்டு..

இயக்குநர் ஷங்கர்!
------------------------
அஜித் சார
வச்சு ஒரு படமாவது பண்ணனும்னு ஆசை,
நான் முதல்ல ஜீன்ஸ்
படத்துக்கு
அஜீத்தை தான் கூப்பிட்டன்..
சில சந்தர்ப்ப
சூழ்நிலை எங்களை
சேர விடல.

பாரதி ராஜா
---------------
நான் சினிமால மிஸ்
பண்ணதுன்னு கேட்டீங்கன்னா அது அஜித்
தான் ..

விஜய்
--------
அஜித்திடம்
எனக்கு பிடித்தது அவர்
தன்னம்பிக்கை தான்,
என்னுடைய பர்சனல்
வாழ்க்கையில்
அவருக்கு மிகப்பெறும்
பங்குண்டு.
நான் தான்
அவருக்கு மிகப்பெரிய
எதிரி என்று எல்லோரும்
நினைக்கிறார்கள்.
ஆனால் அவரோட வெறிபிடிச்ச
ரசிகன்
முதலில் நானாகத்தான்
இருப்பேன்.
ஆசை -படம் முதல் ஆரம்பம் வரை.
நான்தம்பி என்றால் அவர்
அண்ணன்.

ஸ்ரீ தேவி
-----------
தமிழ் படத்துல
நடிக்கணும்னா இப்ப
உள்ள ஹீரோ கூட
வாய்ப்பு கேட்டா யாரு கூட
நடிப்பீங்க?? ஹும்ம்ம்.. அஜித்

ஜெயராமன்
---------------
ரஜினி, கமல் சார் கு அப்புறம்
அஜித்
தான் சத்தியம் -நிச்சியம்.

தமன்னா
-----------
அடுத்த மாஸ். அஜித்
அவர்கூட நடித்ததுற்க்காகவே
நான் கலைத்துறையை
காதலிக்கிறேன்.
சூர்யா
--------
அஜித் சார்
எனக்கு வாழ்க்கை குடுத்துருக்கரு
ன்னு தான் சொல்லுவேன்,
(எடுத்து காட்டுக்கு : நந்தா,
கஜினி,... )
டான்ஸ் மாஸ்டர் பிருந்தா
அஜித் சார்
வெரி ஹாநேச்ட்   

Thala-Ajith Rasigan apadinu solrathuke santhosama irukku

Siddha said about sleep mode! | தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது!


மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும்.இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும்,

உடல்வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ] பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள்  கூறுகின்றனர்.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்

கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை

நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை

நம்பிக் காண் .

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,

பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு

ஓங்குயிர் தெற்கு

மத்திமம் மேற்கு

மரணம் வடக்கு

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.

தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.

மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி

தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,

இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும்

அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.இதனால்இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்

(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.குப்புறப் படுக்கக் கூடாது,

தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை

நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்கவேண்டும்.

இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்

வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான

வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.

இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.

இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.

இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்

சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.

Monday, March 30, 2015

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பசங்க நல்ல புருஷனா இருக்காங்களாம்!! அப்போ நீங்க???


இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலரை தூக்கிவிட்டு திமிராக திரியும் ஆட்கள், இவர்களது காதல் கடிதங்கள் பலவன பாலைவன மலர்களாகி போனவை என்பது இவர்களது மனது மட்டுமே அறிந்த ஒன்று. ஆயினும் இவர்கள் பெண்கள் மெச்சும் கணவர்களாக இருகின்றனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அட நம்புங்க பாஸ்!! பொண்ணுகளே சொல்றாங்க மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பசங்க தான் அவங்கள தாங்குறாங்களாம்!!

கௌதம் மேனன் சினிமாவை கண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் என்ன அவ்வளவு கெத்தா என கேட்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக இன்ஜினியரிங் மாணவராக இருந்திருக்க முடியாது. கலை அறிவியல் அல்லது மருத்துவம் படித்தவர்களுக்கு வேண்டுமானாலும் இந்த சந்தேகம் வரலாமே தவிர இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அல்ல.

என்னய்யா ரொம்ப சீன் போடுறீங்க அப்படி என்ன மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பசங்க பொண்டாட்டிய ரொம்ப பெருசா  பாத்துக்கிட்டாங்கன்னு நீங்க கேட்டா? பொண்ணுங்க சொன்ன இந்த விஷயத்தை எல்லாம் நீங்களே படிச்சு தெரிஞ்சுக்குங்க...

1) பெண்களை பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள்...      
நான்கு வருடம் பெண்களை தூரம் நின்றே ரசித்த இவர்கள். தங்களுக்கென்று கிடைத்த அழகு பதுமையை குழந்தை போல பார்த்துக் கொள்கிறார்களாம்.

2) மறதி இல்லாதவர்கள்...
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க ஆயிரக்கணக்கான ஃபார்முலாவினை மனம்பாடம் செய்த இவர்கள் அவ்வளவு எளிதில் முக்கியமான நாட்களை மறக்க மாட்டார்களாம். இது ஆண்களிடம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயம்.

3) ஏமாற்ற மாட்டார்கள்...
கல்லோரியிலும் சரி, அலுவலகத்திலும் சரி பெண்கள் பெரும்பாலும் இல்லாத சுற்றுசூழலில் வாழ்பவர்கள் என்பதால், இவர்கள் தங்களது மனைவியை ஏமாற்றமாட்டார்கள் என பெண்கள் கருதுகின்றனர்.

4)  வியப்பூட்டும் பரிசுகள்....
கரடி பொம்மை, கிரீட்டிங் கார்டுகளுக்கு எல்லாம் டாட்டா சொல்லிவிட்டார்கள் பெண்கள். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பசங்க தரும் வியப்பூட்டும் ரோபோ பரிசுகள் தான் அவர்களை வியக்க வைக்கிறது.

5)  கார்களில் சுற்றுப்பயணம்...
உயர்ரக கார்கள் இல்லாவிடினும், தாங்கள் வைத்திருக்கும் கார்களை சொகுசாக வடிவமைக்க தெரிந்தவர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பசங்க. பொதுவாகவே ஊர்சுற்ற பிடித்த பெண்கள் இவர்களுடன் திருமணத்திற்கு பின் இவர்களது சொகுசான கார்களில் ஊர் சுற்ற அதிகம் விரும்புகின்றனர்.

6) அதிக நேரம் செலவிடுவார்கள்...
ஐ.டி. வேலைகளில் லட்சங்களில் சம்பிதிப்பவர்களை விட மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பசங்க அதிக நேரம் அவரது மனைவியுடன் செலவிடுகின்றனர். இவையெல்லாம் பெண்களுக்கு பிடித்தமான விஷயங்களாக கூறப்படுகிறது.

7)வீட்டு வேலைகள்...
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பசங்க இருந்தால் வீட்டு வேலைகள் செய்வது சுலபம் என கருதுகின்றனர். சம்சாரத்தில் இருந்து மின்சாரம் வரை  அனைத்து வீட்டு வேலைகளையும்  கட்சிதமாய் செய்து முடிக்கிறார்களாம் இவர்கள்.

8) ஷாப்பிங் செய்யும் போது காத்திருப்பார்கள்...
மொக்கையான வகுப்புகளையே மணிக்கணக்கில் உட்கார்ந்து கவனித்த அவர்களுக்கு பொறுமை அதிகம். அதனால் ஷாப்பிங் செய்யும் போது பொறுமையாக  இருப்பார்களாம்.

9) கனவுகளை நிறைவேற்றுபவர்கள்...
தாங்கள் விரும்பிய படிப்பினை படித்து முடித்த அவர்களுக்கு கனவு மெய்படுவதன் உணர்வை அறிந்தவர்கள். எனவே, அவர்களது மனைவியின் கனவுகளையும் நிறைவேற்றுவார்கள்.

"Proud to b a MECHANICAL ENGINEER"



[source: whatsapp]

Saturday, March 28, 2015

தல அஜித் நடித்ததில் அதிக நாள் ஓடிய படங்கள்


1.வாலி-270 நாள்கள்
2.காதல் கோட்டை-240 நாள்கள்
3.அமர்க்களம்-225 நாள்கள்
4.ஆசை-210 நாள்கள்
5.வில்லன்-200 நாள்கள்
6.வான்மதி-175 நாள்கள்
7.வரலாறு-175 நாள்கள்
8.தீனா-175 நாள்கள்
9.காதல் மன்னன்-150 நாள்கள்
10.கண்டுக்கொண்டேன்
கண்டுக்கொண்டேன் -150 நாள்கள்
11.சிட்டிசன்-150 நாள்கள் 12.பில்லா-150 நாள்கள்

தல அஜித்தின் ரத்தங்களே இதில்
ஒரு படம் பிடித்திருந்தாலும் பகிருங்கள்!