Wednesday, December 7, 2016

Journalist, Political Analyst, Actor Cho Ramaswamy Passed Away!

Cho

Cho'Ramaswamy, a senior journalist, political analyst and actor, died on Wednesday at Apollo Hospital in Chennai, an official said. He was 82.

A former BJP Rajya Sabha member, Mr Ramaswamy was ailing for some time and was in the hospital.

He founded and edited the political magazine Thuglak and was fearless in criticising the ruling government in the state or at the centre.



Mr Ramaswamy had personal rapport with many politicians in the country. Late Tamil Nadu Chief Minister J Jayalalithaa was a good friend of Mr Ramaswamy and used to seek his views.
 


A multi-faceted personality Mr Ramaswamy was also a play writer and a stage actor. He has also directed several movies and was also a screen play writer.

Mr Ramaswamy has acted in movies along with MG Ramachandran, Sivaji Ganesan, Jayalalithaa, Kamal Hassan, Rajinikanth and others.

He has written, directed and acted in over 20 Tamil plays which were performed over 5,000 times, acted in 180 movies scripted 14 movies, directed four films.

He is survived by wife, son and daughter.


Mr. & Mrs. Cho | Jayalalitha
Prime Minister Narendra Modi, who visited Mr Ramaswamy when he was critically ill early this year, tweeted, "Cho Ramaswamy was a multidimensional personality, towering intellectual, great nationalist & fearless voice who was respected and admired."

Saturday, November 5, 2016

மனைவி அமைவதெல்லாம்!!

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நெறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது.

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில் படும்படி வைத்தேன் . இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன்.எஸ் .ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன்.கேரம் ,செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள் . ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழ துவங்கி இருந்தேன் .

ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..!

விருந்து முதற்கொண்ட சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது.


கீழ்க்கண்ட உரையாடல்கள் சில தினங்களில் சில தினங்கள் இடைவெளியில் நடந்தது.
புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ?
இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..!
எந்த புக்கும் படிச்சது இல்லையா ?
ஆமாங்க எனக்கு இந்த புத்தகம் ஏதும் படிக்க புடிக்காது..!
இந்த குமுதம் ,ஆனந்த விகடன் இதெல்லாம் கூட படிச்சது இல்லையா ?
நான் + 2 படிச்சப்போ படிச்ச பாட புத்தகம் தான் நான் கடசியா படிச்சது அதுக்கப்புறம் எந்த புக்கும் படிச்சது இல்ல...!
எதோ ஜோக் சொன்னதுபோல அவள் சொல்லி சிரிக்க நான் வெளிறிபோனேன்..!

எனக்கு மண்டை காய்ந்துபோனது எந்த ஒரு புத்தகமும் படிகாதவளிடம் போய் பாலகுமாரனை பற்றி பேச முடியுமா..? சேர்த்து வைத்து இருந்த புத்தகங்கள் ...?ஒரு அட்டைப்படத்தில் பால குமரன் என்னை கவலையுடன் பார்ப்பதாக தோன்றியது ..!

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை பார்வையில் படும்படிதான் வைத்து இருந்தேன்..! அதை பற்றி அவள் கேட்கவேண்டும் நான் பீற்றி கொள்ளவேண்டும் இதுதான் திட்டம் .
ஆனால் ..? எதோ வீட்டில் உள்ள காலண்டரை பார்ப்பது ,வால் கிளாக்கை பார்ப்பதுபோல அந்த பரிசுகளை கோப்பைகளை அவள் கண்டுகொள்ளவே இல்லை.

அப்புறம் வேறு வழி இல்லாமல் நானே சொல்ல ஆரம்பித்தேன் ..!
இந்த கப் எல்லாம் நான் வாங்கினது தெரியுமா ..?
எதுக்கு வாங்குனீங்க..?
இதெல்லாம் நான் கிரிக்கெட் வெளையாடி வாங்கினது
ஒனக்கு கிரிக்கெட் புடிக்குமா ..? கிரிக்கெட் பார்ப்பியா ..?

எங்க வீட்டுல எல்லாரும் கிரிக்கெட் பார்ப்பாங்க எனக்கு மட்டும் கிரிக்கெட் சுத்தமா புடிக்காது ..!
(அதானே எனக்குன்னு இப்படித்தான் வாய் க்கனும்னு இருக்கும்போது எப்படி கிரிக்கெட் புடிக்கும் )

யாரோ பின் மண்டையில் பேட்டால் அடித்தது போல இருந்தது..! நொந்துபோனேன்..!
இந்த பாடகர் - பாடகிகள்ல உனக்கு யார புடிக்கும்..?
ம்ம்... இவங்களத்தான் புடிக்கும்னு சொல்ல முடியாது பொதுவா எல்லா பாட்டும் கேப்பேன்..!

உனக்கு புடிச்ச பாட்டு ஒன்னு சொல்லேன்..!
அட போங்க திடீர்னு இப்படி கேட்டா எப்படி சொல்லுறது ..?
சரி எஸ் .ஜானகி புடிக்குமா ?
யாரு கெழவி போல இருக்குமே அதுவா ?
எஸ் .ஜானகியை கெழவி ன்னு சொன்னதும் எனக்கு செம கோவம் ...!எனக்கு புடிச்ச பாடகி அவரை கிழவின்னு சொன்னதும் என்னால அதை பொறுத்துக்க முடியல. என்ன செய்ய எல்லாம் விதி...!

என்னை நானே நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவள்மேல் கோபப்பட முடியவில்லை ஆனால்..? அவளுக்கு கோவம் அதிகம் வரும் முன்கோபி என் பாதுகாப்பும் முக்கியமில்லையா எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.

மனைவி விசயத்தில் மிகுந்த ஏமாற்றம் ...!துளியும் எனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை .
ஆணித்தரமாய் எனக்கு தோன்றியது இதுதான்
இவள் எனக்கு ஏற்ற ஜோடிஇல்லை .

கணவன் மனைவி இருவரும் இரட்டை மாட்டு வண்டியைபோல என்று சொல்வார்கள் ஒரு மாடு சரியில்லாமல் போனாலும் குடும்ப வண்டி சரியாக ஓடாது என்று. உண்மைதான். நான் இப்படி முடிவு எடுத்தேன் பேசாமல் அவளையும் வண்டியில் தூக்கி உட்கார வைத்துவிட்டு ஒற்றை மாடாக வண்டியை ஓட்ட வேண்டியதுதான். வேறு என்ன செய்வது ? எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை..!

பெரிய சுவாரசியம் ஏதுமின்றி நகர்ந்தன நாட்கள் சில மாதங்களில் மனைவி கர்பவதியகவே நிலைமை மாற தொடங்கியது. வீடு உற்சாகத்தில் திளைத்தது ஆளாளுக்கு அவளை கொண்டாட ஆரம்பித்தோம்.

மாசமா இருக்கும்போது என்னவெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் வாங்கி கொடுக்கணும் புடிச்சத சமைச்சு போடணும் - இது என் அம்மா
நானும் அவளிடம் கேட்கிறேன்
உனக்கு என்னவெல்லாம் சாப்பிட புடிக்கும் சொல்லு
அதெல்லாம் ஒன்னும் வேணாம்
இல்ல சொல்லு நான் வற்புறுத்தி கேட்கிறேன்
பிடிக்குமென சிலதை சொல்ல
முன் சமயங்களில் என்ன சமையல் செய்யலாம் என்ற விவாதம் வரும்போது இதையெல்லாம் சொல்லி இருக்கிறாள் நானும் சாதாரணமாய் அதையெல்லாம் மறுத்து இருக்கிறேன் ஆனால் அவளுக்கு பிடிக்குமென சொன்னதில்லை.

இதெல்லாம் உனக்கு புடிக்குமா இதுவர சொன்னதே இல்ல ..?
ம்ம்ம் இப்போதானே கேக்குறீங்க.
அவள் சிரித்து கொண்டே சொல்ல எனக்குள் சுளீரென ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.

பிரசவம் நெருங்க இயல்பாய் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது இன்னும் சில தினங்களில் இங்கே ஒரு குழந்தை இருக்கும் என்ற எண்ணமே ஆனந்த கூத்தாட வைத்தது.

நாங்கள் விரும்பிய படியே அழகிய பெண் குழந்தை நார்மல் டெலிவரிதான் .
நான் நினைத்து இருந்தேன் பிரசவம் ஆன பெண்கள் ஒரு வாரம் பத்துநாள் என படுக்கையிலேயே இருப்பார்கள் என ஆனால் இவள் மறுநாளே சாதரணமாக நடமாட ஆரம்பித்தாள் யாராவது பெரியவர்கள் குழந்தையை பார்க்க வந்தால் சொல்ல சொல்ல கேட்காமல் கட்டிலிலிருந்து இறங்கி எழுந்து நின்று கொள்வாள் மரியாதையை நிமித்தமாய்.

இவளில் இந்த செய்கை குறித்து உறவினர்கள் புகழ்ச்சியாய் பேச எனக்கோ மிகவும் பெருமையாய் இருந்தது.

பெண்களின் குணம் எப்படி இருந்தாலும் தாய் ஆன பிறகு எல்லா பெண்களும் ஒரேமாதிரித்தான் இருக்கிறார்கள். கோபம்,ஆத்திரம் இவைகள் எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனால் குழந்தை கவனிப்பில் எப்போதும் பொறுமை மட்டுமே காட்டுகிறார்கள் நள்ளிரவில் குழந்தை அழுதாலும், மலம் கழித்தாலும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கவனிக்கும் தன்மை இயல்பாகவே வந்து விடுகிறது.

குழந்தையையும் கவனித்துகொண்டு எனக்கு செய்யும் பணிவிடைகளிலும் எந்த குறையும் வைக்கவில்லை .
தாய்மை என்ற விசயத்தை என் தாயிடம் உணர்ந்ததைவிட மனைவியிடமே அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது . இப்போது அவள்மேல் ஒரு மரியாதையை ஏற்பட துவங்கியது .

வீட்டு வேலைகள் குழந்தை வளர்ப்பு என அவள் சுமை எனக்கு புரிந்தது..!
சில வருடங்கள் போக...! இப்போது இரண்டாவது குழந்தை...! முதல் குழந்தை நார்மல் டெலிவரி ஆனால் இரண்டாவது சிசேரியன்.

இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மயக்கத்தில் இருக்கும் அவளை பார்க்க செல்கிறேன் தூக்கம் போலவும் இல்லாமல் ,மயக்கம் போலவும் இல்லாமல் மூக்கில் எதோ ஒரு குழாய் இருக்க அவள் இருந்த நிலை என்னை ஒரு மாதிரி ஆக்கிவிட்டது. அப்போது நினைத்து கொண்டேன் இவளிடம் இனி எதற்கும் கோபப்பட கூடாது என்ன சொன்னாலும் பொறுத்து கொள்ள வேண்டும் என்று ..!
சில பெண்கள் நினைத்து கொள்ளலாம் கணவன் தன்னிடம் அடங்கி போகிறான் என்று ..! அப்படி அல்ல...! சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும் அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த அடங்கி போதல். மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான் .

இரண்டு குழந்தைகள், வீட்டு வேலைகள், குழந்தை படிப்பு, பாடம் சொல்லி கொடுத்தல், இதற்க்கு இடையே நான் செய்யும் அலும்புகள் எல்லாவற்றையும் சமர்த்தாக கவனித்துகொள்ளும் அவளிள் அந்த மனைவி ,இல்லத்தரசி என்ற ஸ்தானத்தின் பிரம்மாண்ட விஸ்வ ரூபத்தின் முன் ''நான்'' கொஞ்ச கொஞ்சமாக நலிந்து கொண்டு இருந்தேன். பால குமாரன் ,கிரிக்கேட் எஸ் .ஜானகி எல்லாம் என் கவனிப்பில் இருந்து விலகி செல்ல ..!
ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன் ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!


எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தேன்
ஆனால்...! இப்போது எங்களுக்குள்...!


தமிழ் ,ஆங்கிலம் ,வரலாறு ,புவியியல்,இயற்பியல்,தாவரவி ,விலங்கியல் வேதியல் எல்லாம் ஒர்க் அவுட் ஆகி போனது...

Free IDM Serial Keys, Crack & Procedures - 2016 { 100% Working }

IDM Serial Number Activation Procedure...


IDM!

These Keys Works for More than 95% of people who follows all the steps given at this page perfectly. So if you have any queries contact us or leave a comment below we will try to help you.

How To Apply Serial Keys?

1. Turn off internet connection

2. Enter any fake data's in name and email

3. Enter any one row of keys given below

4. Enjoy!

5. Don't forgot to share if it works.



Turn Off Your Internet Connection and Apply Any one these Keys to Work Properly

Below are the Serial number for idm.. Enjoy!

629U7-XLT5H-6SCGJ-2CENZ
L67GT-CE6TR-DFT1D-XWVCM
XONF7-PMUOL-HU7P4-D1QQX
F9TZ9-P6IGF-SME74-2WP21
CJA0S-K6CO4-R4NPJ-EKNRK
N0Z90-KJTTW-7TZO4-I27A1 

Finally Tips to improve IDM Speed at cracked version

So the above keys are working? whats now? install idm cc in firefox if you are using ff as your primary browser now and enjoy.

If the keys are not working then you might be lost somewhere in my steps given above, so please follow the steps i gave carefully and enjoy idm full version.

Also we are telling that these keys may cause problems in future like popups will come from idm server to register the product with genuine serial number etc etc, so its not our responsible to take care of it, use these idm serial number at your own risk, Thanks.


Afterthis process you get an error messages that you have registered IDM using fake serial key and IDM will exit. Now here the hack starts.






=> Now Go to C:/ then Windows the System32 then Drivers and then etc. (or: Press Windows+R then type 'drivers' then select etc)





Note : For Windows 7 users, due to security reasons you will not be able to save hosts file.

so follow this steps :

First of all go to C:/ drive then go to Windows Folder and then go to System32 folder and then go to Drivers folder and then go to Etc Folder, in the Etc folder you will see the hosts file.





=> (windows 7 or vista): Now right click on hosts file and go to its propeties, then go to security tab and then select your admin account, just below u will see an edit button (in front of change permissions), Now give the user full control and write and read rights and then click on apply and then click on Ok, now u will be able to edit the hosts file and save changes in it.







=> (windows 7 or vista): For more Details Go To: ( How to edit Windows 7 or Vista Hosts File)


Open with Notepad




Now copy the below lines of code and add to hosts file as shown image box :



127.0.0.1 tonec.com

127.0.0.1 www.tonec.com

127.0.0.1 registeridm.com

127.0.0.1 www.registeridm.com

127.0.0.1 secure.registeridm.com

127.0.0.1 internetdownloadmanager.com

127.0.0.1 www.internetdownloadmanager.com

127.0.0.1 secure.internetdownloadmanager.com

127.0.0.1 mirror.internetdownloadmanager.com

127.0.0.1 mirror2.internetdownloadmanager.com



After adding these piece of code, save the notepad file. And exit from there.

Picture Showing saved IDM Codes in Hosts File


Now start your internet download manager, and now you IDM has been converted to full version and specially when you update next time, your registration will not expire.




That means it will remain full version for life time and you can update it without any problem in future.



 This is the Picture proof of Successfully Hacked IDM:


Picture Showing Fully Registered Latest IDM




I hope you are now able to convert your Trial version of IDM into Full Version.

Saturday, July 9, 2016

SG51 | Singtel to celebrate National Day with free mobile data and Singtel TV & TV GO!


To celebrate Singapore's 51st National Day, Singtel will be offering customers free mobile data and free viewing on Singtel TV and Singtel TV GO on 9th August (from 12.01 am to 11.59 pm).

Singtel's postpaid mobile customers will enjoy free mobile data for the day, while Singtel TV customers will get to watch exciting content on over 140 channels on Singtel TV for free from 5 to 9 August. This includes popular channels such as the Disney Channel, National Geographic Channel HD, FOX Action Movies HD, KBS World HD, Astro Ria and STAR Gold. Previews will be available from 6.00 am, 5 August 2016, to 11.59 pm, 9 August 2016.

During the same period, everyone will be will be able to enjoy full free access to Singtel's TV GO app, available on the App Store and Google Play store, even without a Singtel subscription.

Mr Yuen Kuan Moon, Singtel’s CEO Consumer Singapore, said: “As a proud home-grown company, Singtel is delighted to celebrate Singapore’s birthday with everyone. National Day is also a celebration of family and community. We thank our customers for their continued support and hope our mobile and TV services will help to bring them closer to their friends and loved ones.”


National day with SingTel

Saturday, July 2, 2016

சென்னையில் சுவாதி கொலை முதல்.. செங்கோட்டையில் ராம்குமார் கைது வரை!


சென்னை: இன்போசிஸ் பொறியாளர் சுவாதி கடந்த மாதம் 24-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பல்வேறு யூகங்கள் எழுந்த நிலையில் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார்தான் படுகொலை செய்த கொலையாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு சுவாதி கொல்லப்பட்டது முதல் ராம்குமார் கைது வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பு:

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 24-ந் தேதி காலையில் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் சுவாதியை பைக்கில் கொண்டு வந்து இறக்கி விட்டு சென்றார்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை 6.30 மணிக்கு சுவாதியின் பின்னால் நின்றிருந்த மர்மநபர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றார்.

ரயில் பயணிகள் சம்பவத்தை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த சுவாதியை யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.

கொலை செய்யப்பட்ட சுவாதியின் உடல் 3 மணி நேரமாக நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்திலே இருந்தது.
காலை மணிக்கு பின்னரே ரயில்வே காவல் துறையினர் சுவாதியின் உடலை அப்புறப்படுத்தினர்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் குற்றவாளியை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
ரயில் நிலையத்தின் அருகில் உள்ள வீடுகளின் கண்காணிப்பு கேமரா பதிவில் சந்தேகத்திற்குரிய நபரின் உருவம் பதிவானது தெரியவந்தது.

==ஜூன் 25==
போலீசார் அந்த நபர் தான் கொலையாளியாக இருக்கும் என்ற சந்தேகத்தில் சிசிடிவி பதிவை ஊடகங்களில் வெளியிட்டனர்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டிய சவுராஷ்டிரா நகரில் உள்ள மற்றொரு வீட்டின் கண்காணிப்பு கேமரா பதிவில், சந்தேகத்துக்கு உரிய நபர் ரயில் நிலையச் சுவரைத் தாண்டிக் குதிக்கும் காட்சி பதிவாகி இருந்தது.
சுவாதி படுகொலை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தது.

==ஜூன் 26==
சுவாதி படு கொலை வழக்கு ரயில்வே காவல்துறையிடமிருந்து சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
கொலையாளியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
சுவாதியின் செல்போன் உரையாடல்கள் அடிப்படையில் விசாரணை தொடங்கியது.

==ஜூன் 27==
ஸ்டாலின், குஷ்பு, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், தமிழிசை ஆகியோர் சுவாதியின் பெற்றோரை சந்தித்தனர்.
சுவாதி கொலையாளியை கண்டுபிடிக்க முடியாததால் போலீசாருக்கு எதிர்ப்பு வலுத்தது.

==ஜூன் 28==
சுவாதி படுகொலை வழக்கை தாமே முன்வந்து வழக்கை எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
சுவாதி கொலை வழக்கில் முன்னேற்றமில்லை என்றால் நீதிமன்றமே விசாரணையை நடத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

==ஜூன் 29==
சுவாதியின் பேஸ்புக் அக்கவுண்ட் அதிகாரப்பூர்வமாக முடக்கப்பட்டது.
சுவாதியின் படுகொலையில் பிலால் மாலிக் என்பவருக்கு தொடர்பிருப்பதாக நடிகர்கள் ஒய்ஜி மகேந்திரன், எஸ்வி சேகர் ஆகியோர் ஃபேஸ்புக் பதிவிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.

==ஜூன் 30==
நுங்கம்பாக்கத்தில் நடைபாதையில் தப்பி ஓடிய நபர்தான் கொலையாளி என தெளிவான புகைப்படத்தை வெளியிட்டது போலீஸ்.
சுவாதி செல்போன் கடைசியாக சூளைமேட்டில் சிக்னலில் இயங்கியது.
பின்னர் கொலையாளி தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் மேன்சனில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்
மேன்சன் காவலாளி மற்றும் மேனேஜர் அளித்த தகவலின் பேரில் குற்றவாளி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என உறுதியானது.


==ஜூலை 1==
செங்கோட்டை அருகே சுப்பிரமணியபுரத்தில் குற்றவாளி பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
நேற்று காலை முதல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த குற்றவாளி ராம்குமாரை போலீசார் தீவிரமாக கண்கானித்தனர்.
ஆடு மேய்த்து விட்டு மாலையில் வீடு கொலையாளி ராம்குமார் வீடு திரும்பிய பின்னரும் போலீசார் கண்காணித்தனர்.
பின்னர் இரவு 10 மணியளவில் ராம்குமாரை கைது செய்ய போலீசார் முயற்சித்தனர்.

ஆனால் போலீசாரை பார்த்த ராம்குமார் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
ராம்குமாரை போராடி கைது செய்த போலீசார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள ராம்குமார், தீவிர சிகிச்சைக்குப் பின்னர் பேசினார்.

போலீசார் நடத்திய விசாரணையில் ராம்குமார், சுவாதியை கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.