Sunday, June 14, 2015

எங்கே? எங்கே?? எங்கே???

எங்கே? எங்கே? எங்கே?

இயற்கை எங்கே?

பனையோலை விசிறி எங்கே?

பல்லாங்குழி எங்கே?

கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?

கோகோ விளையாட்டு
எங்கே?

சாக்கு பந்தயம் எங்கே?

கில்லி எங்கே?

கும்மி எங்கே?

கோலாட்டம் எங்கே?

திருடன் போலீஸ் எங்கே?

ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?

மரப்பாச்சி கல்யாணம் எங்கே

மட்டை ரெயில் எங்கே?

கமர்கட் மிட்டாய் எங்கே?

குச்சி மிட்டாய் எங்கே?

குருவி ரொட்டி எங்கே?

இஞ்சி மரப்பா எங்கே?

கோலி குண்டு எங்கே?

கோலி சோடா எங்கே?

பல் துலக்க
ஆலங்குச்சி
எங்கே

எலந்தை பழம் எங்கே?

சீம்பால் எங்கே?

பனம் பழம் எங்கே?

பழைய சோறு எங்கே?

நுங்கு வண்டி எங்கே?

பூவரசன் பீப்பி எங்கே?

கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?

நடைபழக்கிய
நடை வண்டி
எங்கே ?

அரைஞான் கயிறு எங்கே?

அன்பு எங்கே?

பண்பு எங்கே?

பாசம் எங்கே?

நேசம் எங்கே?

மரியாதை எங்கே?

மருதாணி எங்கே?

சாஸ்திரம் எங்கே?

சம்பரதாயம் எங்கே?

விரதங்கள் எங்கே ?

மாட்டு வண்டி எங்கே?

மண் உழுத எருதுகள் எங்கே?

செக்கிழுத்த காளைகள் எங்கே?

எருமை மாடுகள் எங்கே?

பொதி சுமந்த கழுதைகள் எங்கே?

பொன் வண்டு எங்கே?

சிட்டுக்குருவி எங்கே?

குயில் பாடும் பாட்டு எங்கே?

குரங்கு பெடல் எங்கே?

அரிக்கேன் விளக்கு எங்கே?

விவசாயம் எங்கே?

விளை நிலம் எங்கே?

ஏர்கலப்பை எங்கே?

மண் வெட்டி எங்கே?

மண்புழு எங்கே?

வெட்டுமண் சுமந்த
பின்னல் கூடை
எங்கே ?

பனை ஓலை குடிசைகள்
எங்கே ?

தூக்கனாங் குருவி கூடுகள்
எங்கே ?

குளங்களில் குளித்த
கோவணங்கள்
எங்கே?

அந்த குளங்களும் எங்கே?

தேகம் வளர்த்த
சிறுதானியம்
எங்கே?

அம்மிக்கல் எங்கே?

ஆட்டுக்கல் எங்கே?

மோர் மத்து ?

கால்கிலோ கடுக்கன்
சுமந்த காதுகள்
எங்கே ?

நல்லது கெட்டது
சுட்டிக்காட்டும்
பெரியவர்கள்
எங்கே?

தோளிலும் இடுப்பிலும்
சுமந்த
பருத்தி துண்டு
எங்கே ?

பிள்ளைகளை சுமந்த
அம்மாக்களும்
எங்கே ?

தாய்பாலைத் தரமாய்
கொடுத்த தாய்மை
எங்கே ?

மங்கலங்கள் தந்த
மஞ்சள் பை
எங்கே ?

மாராப்பு சேலை
அணிந்த பாட்டிகள்
எங்கே?

இடுப்பை சுற்றி சொருகிய
சுருக்கு பணப்பையும்
எங்கே?

தாவணி அணிந்த இளசுகள்
எங்கே ?

சுத்தமான நீரும்
எங்கே ?

மாசு இல்லாத காற்று எங்கே ?

நஞ்சில்லாத காய்கறி எங்கே?

பாரம்பரிய நெல் ரகங்களும்
எங்கே?

எல்லாவற்றையும் விட
நம் முன்னோர்கள்
வாழ்ந்த முழு
ஆயுள் நமக்கு
எங்கே?

இதற்கு பாமரனாலும்,
மெத்தபடித்தவனாலும்,
விஞ்ஞானியாலும்,
ஏன் கணினியாலும்
கூட பதில்
சொல்ல முடியாது.

ஏனென்றால் நிம்மதியான வாழ்வை மறந்து பணம் எனும்
காகித்தை தேடி இந்த
உலகம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

அதுசரி அடுத்த
தலைமுறையை பற்றி சிந்திக்க நமக்கு
நேரம் தான்
எங்கே..? எங்கே...?

No comments:

Post a Comment