Tuesday, January 27, 2015

அஜித் படம் தள்ளிப்போனது! - உண்மையை உடைத்த சரண்!!

Saran | Ajith

     கோலிவுட்டிற்கு என்று சில வெற்றி கூட்டணிகள் இருக்கும். அந்த வகையில் அசல் படத்தை தவிர்த்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் என தொடர் வெற்றியை அஜித்திற்கு கொடுத்தவர் இயக்குனர் சரண்.

இவர் தற்போது இயக்கியுள்ள ஆயிரத்தில் இருவர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ஒரு செய்தியை கூறினார். இதில் ’அஜித்திற்கும், சரணுக்கும் சில மனக்கசப்பு உள்ளதாக வெளியில் கூறப்படுவதாக சொல்கிறார்கள்.

நாங்கள் யார் என்று எங்களுக்கு தெரியும், மேலும், அசல் படத்திற்கு பிறகு நானும், அஜித்தும் கவிதாலயா நிறுவனத்திற்காக ஒரு படம் செய்வதாக இருந்தது. அது ஒரு சில காரணங்களால் தள்ளிப்போனது, ஆனால், கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும்’ என இயக்குனர் சரண் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment